விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அதிலும் குறிப்பாக மஹாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், கோவா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்து அமைப்புகள் சார்பில் வெகு விமரிசையாக இந்த விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது.
இந்த விழாவை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தியேறிவிக்கப்பட்டுள்ளதாவது:- "நாட்டு மக்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். கணபதி பாப்பா மோரியா" என்று தெரிவித்துள்ளார்.