இந்த திட்டம் பற்றி தெரியுமா? 5 வருட முதலீட்டில் ரூ. 21 லட்சம் வருமானம்..!
Newstm Tamil September 08, 2024 05:48 PM

சேமிக்க விரும்புவர்களுக்கு போஸ்ட் ஆபிஸ் வழங்கும் சூப்பரான திட்டம் ஒன்று குறித்து தற்போது தெரிந்து கொள்ளலாம்.

பொதுமக்கள் பணத்தை சேமிப்பதற்கு வங்கிகள், போஸ்ட் ஆபிஸ்கள் ஏராளமான சிறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. முதலீடு செய்ய விரும்புவர்களுக்கு போஸ்ட் ஆபிஸ் ஷேவிங் ஸ்கீம்கள் மிகவும் பயனளிக்க கூடியதாக உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்கள் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் வசதிகளை தபால் நிலையங்கள் வழங்கி வருகின்றன.

தபால் நிலையங்களில் பல்வேறு RD திட்டங்கள் இருந்தாலும், ரெக்கரிங் டெபாசிட் பிரபலமான சேமிப்பு பிளானாகும். ஃபிக்சட் டெபாசிட் மற்றும் பிற நீண்ட கால சேமிப்பு திட்டங்களுக்கு மாற்றாக ரெக்கரிங் டெபாசிட் ஸ்கீம் உள்ளது.தபால் நிலையங்களில் இத்திட்டத்திற்கு வருடத்திற்கு 6.70 சதவிகித வட்டி வழங்கப்பட்டு வருகிறது. ரெக்கரிங் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒருவர் 30,000 ரூபாய் தொகையை முதலீடு செய்யும் போது ரூ. 21 லட்சம் முதிர்வுத்தொகையாக கிடைக்கும். அதாவது முப்பதாயிரம் முதலீடு செய்யும் போது ஐந்தாண்டு மெச்சூரிட்டி காலத்திற்கு பிறகு ரிட்டன் ரூ. 21,40,074 இருக்கும். இதில் வட்டிமே 6.7 சதவீதமாக ரூ. 3,40,974 கிடைக்கும்.

ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் மெச்சூரிட்டி தேதி வரை பணம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும். வட்டிக்கு வட்டி என்ற கணக்கில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி அதிகரிக்கப்படும். ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களுக்கு தபால் துறை கால அளவாக 5 வருடத்தை நிர்ணயம் செய்துள்ளது. ஒருவர் இந்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த கால அளவை அதிகரிக்க நினைத்தாலும், அதற்கான வசதியும் ரெக்கரிங் திட்டத்தில் உள்ளது.

குறைந்தபட்சமாக 10 ரூபாயை ஒருவர் இத்திட்டத்தில் டெபாசிட் செய்யலாம். அதிகபட்ச தொகைக்கு என்று எந்தவிதமான வரம்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.