தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவித்துள்ளார். இதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. திருத்தி அமைக்கப்பட்ட காலாண்டு நாட்காட்டியைக் குறிப்பிட்டு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நாளை 7.93 லட்சம் மாணவர்கள் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.