ITI Admission: கட்டணமில்லை; மாதாமாதம் உதவித்தொகை- ஐடிஐ மாணவர் சேர்க்கை செப்.30 வரை விண்ணப்பிக்கலாம்; எப்படி?
மாய நிலா September 13, 2024 04:44 PM

ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ மாணவர்கள்‌ நேரடி சேர்க்கை 30.09.2024 வரை நீட்டிக்கப்படுவதாக வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பு:

’’தமிழகத்தில்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித் துறையின்‌ கீழ்‌ 102 அரசு தொழில் பயிற்சி நிலையங்கள்‌ மற்றும்‌ 311 தனியார்‌ தொழில் பயிற்சி நிலையங்கள்‌ இயங்கி வருகின்றன.

இவற்றில்‌ 2024- 2025ஆம்‌ கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை செய்வதற்கான கால அளவு மாணவர்களின்‌ நலன்‌ கருதி 31.08.2024 வரை ஏற்கனவே வழங்கப்பட்டது. தற்பொழுது மாணவர்களின்‌ நலன்‌ கருதி 30.09.2024 வரை நீட்டிக்கப்படுகிறது.

தொழில் பயிற்சி நிலையங்களில் சேர்வது எப்படி?

இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மாணவர்கள்‌ தாம்‌ விரும்பும்‌ தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச்‌ சான்றிதழ்களுடன்‌ நேரில்‌ சென்று தாம்‌ விரும்பும்‌ தொழில் பிரிவை தேர்வு செய்து தொழில் பயிற்சி நிலையங்களில்‌ சேரலாம்‌.

மாதாமாதம் கல்வி உதவித் தொகை

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ சேரும்‌ மாணவர்களுக்கு பயிற்சிக்‌ கட்டணம்‌ இல்லை. கல்வி உதவித் தொகையாக மாதம்‌ ரூ.750/- வழங்கப்படும்‌. 

தமிழக அரசு வழங்கும்‌ விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடு காலணிகள்‌ (ஷூக்கள்), விலையில்லா பயிற்சிக்கான கருவிகள்‌, கட்டணமில்லா பேருந்து வசதி இவை அனைத்தும்‌ வழங்கப்படும்‌.

85% பேருக்கு வேலைவாய்ப்பு

சென்ற ஆண்டுகளில்‌ தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில்‌ 85% பேர்‌ பல முன்னணி தொழில்‌ நிறுவனங்களில்‌ வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்‌. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ இன்றைய தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில்‌ 4.0 உள்ளிட்ட பல நவீன தொழில் பிரிவுகளில்‌ தொழில் பயிற்சிகள்‌ வழங்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக ஏதேனும்‌ ஐயம்‌ எற்படும்‌ நேர்வில்‌ கீழ்க்காணும்‌ அலைபேசி எண்ணில்‌ தொடர்பு கொள்ளலாம்‌.

இவ்வாறு வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித் துறை ஆணையர்‌ தெரிவித்துள்ளார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.