டிஎன்பிஎஸ்சி அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? அக்.12 கடைசி!
மாய நிலா September 13, 2024 06:44 PM

டிஎன்பிஎஸ்சி அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கு இன்று விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 12 கடைசித் தேதி ஆகும்.

அரசு உதவி வழக்கு நடத்துநர்‌, நிலை - 11 (TNPSC Assistant Public Prosecutor Grade II ) குற்ற வழக்கு தொடர்வு துறையில்‌ உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர்‌, நிலை - 11 பதவிக்கான நேரடி நியமனத்திற்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

முதல்நிலைத்‌ தேர்வு,

முதன்மைத்‌ தேர்வு,

நேர்முகத்‌ தேர்வு

சான்றிதழ்‌ சரிபார்ப்பு

இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள்‌: 12.10.2024 11.59 PM

விண்ணப்பத்‌ திருத்தத்தை 16.10.2024 12.01 AM முதல்‌ 18.10.2024 11.59 PM வரை மேற்கொள்ளலாம்.

முதல்நிலைத்‌ தேர்வு – டிசம்பர் 14, 2024 மதியம் 2.30 PM முதல்‌ 5.30 PM வரை

முதன்மைத்‌ எழுத்துத்‌ தேர்வு - முதல்நிலைத்‌ தேர்வு முடிவுகள்‌ அறிவிக்கப்படும்போது வெளியிடப்படும்‌.

தேர்வர்கள்‌ https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.  

தேர்வர்கள்‌ தேர்வாணைய இணையதளத்தில்‌ உள்ள ஒரு முறைப்‌ பதிவு தளத்தில்‌ (ஓடிஆர்) பதிவு செய்த பின்பு இத்தேர்விற்கான விண்ணப்பத்தினை நிரப்ப வேண்டும்‌.

தேர்வர்கள்‌ ஏற்கனவே ஒருமுறைப் பதிவில்‌ பதிவு செய்திருப்பின்‌, அவர்கள்‌ இத்தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தை நேரடியாகப் பூர்த்தி செய்யத்‌ தொடங்கலாம்‌.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.