TNPSC Group 2 Exam 2024: தேர்வர்களே.. குரூப் 2 தேர்வில் எலக்ட்ரானிக் அல்லாத இந்த பொருட்களுக்கும் தடை- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
மாய நிலா September 13, 2024 08:44 PM

தமிழ்நாடு முழுவதும் நாளை குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெறும் நிலையில், எலக்ட்ரானிக் அல்லாத இந்த பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. விதிமுறைகளை மீறினால் விடைத் தாள் செல்லாதது ஆக்கப்படும். 3 ஆண்டுகளுக்கு விலக்கு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     1. மற்ற தேர்வர்களுடன் ஆலோசனை

  1. மற்ற தேர்வர்களிடம் இருந்து நகலெடுத்தல்
  2. மற்றவர்களின் விடைத் தாளில் இருந்து நகலெடுக்க அனுமதித்தல்
  3. அச்சிடப்பட்ட / தட்டச்சு செய்யப்பட்ட / கையால் எழுதப்பட்ட புத்தகங்கள் அல்லது குறிப்புகளில் இருந்து நகலெடுத்தல்
  4. தேர்வு அறையில் இருந்து, பயன்படுத்திய / பயன்படுத்தப்படாத OMR விடைத்தாளின் முழு அல்லது பகுதியை, அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்காமல் எடுத்துச் செல்லுதல்.
  5. ஓஎம்ஆர் விடைத் தாளில் அச்சிடப்பட்ட பார்கோடு மற்றும்/ அல்லது ஓஎம்ஆர் டிராக்கை சேதப்படுத்துதல் ஆகியவற்றை செய்யக் கூடாது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

* P&G டிசைன் டேட்டா புத்தகம்,

* கணினி மற்றும் வரைதல் உபகரணங்கள்,

* லாக் டேபிள்கள்,

* மேப் நகல்கள்,

* புத்தகங்கள்,

* நோட்டுகள்,

* குறிப்புகள்,

* வழிகாட்டிகள்,

* கைப்பைகள்,

* ரஃப் ஷீட்டுகள்,

* காகிதத் தாள்கள்,

* இதர அனுமதிக்கப்படாத பொருட்கள் போன்ற எலக்ட்ரானிக் அல்லாத சாதனங்களையும் வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 

கடந்த ஜூன் மாதம் 2024ஆம் ஆண்டுக்கான குரூப் 2 தேர்வு அறிவிப்பு வெளியானது. இந்த தேர்வுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதையடுத்து குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு நாளை தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

தமிழகத்தில்‌ உள்ள அனைத்து மாவட்டங்களிலும்‌ 2,763 தேர்வு மையங்களில் தேர்வர்கள்‌ எழுத உள்ளனர்‌. குரூப் 2 தேர்வில் மொத்தம் 507 பணியிடங்களுக்கும், குரூப் 2 ஏ தேர்வில் மொத்தம் 1820 பணியிடங்களுக்கும் என மொத்தம் 2 ஆயிரத்து 327 பணியிடங்களுக்கு நாளை தேர்வு நடைபெறுகிறது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.