தமிழ்நாடு முழுவதும் நாளை குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெறும் நிலையில், எலக்ட்ரானிக் அல்லாத இந்த பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. விதிமுறைகளை மீறினால் விடைத் தாள் செல்லாதது ஆக்கப்படும். 3 ஆண்டுகளுக்கு விலக்கு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. மற்ற தேர்வர்களுடன் ஆலோசனை
— TNPSC (@TNPSC_Office) September 13, 2024
* P&G டிசைன் டேட்டா புத்தகம்,
* கணினி மற்றும் வரைதல் உபகரணங்கள்,
* லாக் டேபிள்கள்,
* மேப் நகல்கள்,
* புத்தகங்கள்,
* நோட்டுகள்,
* குறிப்புகள்,
* வழிகாட்டிகள்,
* கைப்பைகள்,
* ரஃப் ஷீட்டுகள்,
* காகிதத் தாள்கள்,
* இதர அனுமதிக்கப்படாத பொருட்கள் போன்ற எலக்ட்ரானிக் அல்லாத சாதனங்களையும் வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 2024ஆம் ஆண்டுக்கான குரூப் 2 தேர்வு அறிவிப்பு வெளியானது. இந்த தேர்வுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதையடுத்து குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு நாளை தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 2,763 தேர்வு மையங்களில் தேர்வர்கள் எழுத உள்ளனர். குரூப் 2 தேர்வில் மொத்தம் 507 பணியிடங்களுக்கும், குரூப் 2 ஏ தேர்வில் மொத்தம் 1820 பணியிடங்களுக்கும் என மொத்தம் 2 ஆயிரத்து 327 பணியிடங்களுக்கு நாளை தேர்வு நடைபெறுகிறது.