BREAKING: நைஜீரியாவில் படகு கவிழ்ந்து பெரும் விபத்து… 64 விவசாயிகள் பரிதாப பலி…!!!
SeithiSolai Tamil September 15, 2024 04:48 PM

நைஜீரியா நாட்டில் உள்ள ஜம்பாரா மாநிலத்தில் 70 விவசாயிகளுடன் சென்ற மரபடகு கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளுக்காக தினந்தோறும் ஆற்றினை கடந்து செல்ல வேண்டும்.

அந்த வகையில் 70 பேர் கொண்ட விவசாயிகள் படகில் சென்ற போது திடீரென ஆற்றில் படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் 6 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு 64 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்து அந்த நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.