இன்றோடு இந்த ஆஃபர் முடிவடைகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து ஆவின் நுகர்வோர் கடைகளிலும், மொத்த விற்பனையாளர்களிடமும் இன்று இரவு வரை ஆவின் நெய் விலை ரூ.10 குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஓணம், மிலாது நபி கொண்டாட்டங்களை முன்னிட்டு ஆவின் நெய் விலை குறைக்கப்பட்டுள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் கொள்முதல் மற்றும் விற்பனை, பால் பொருட்கள் தயாரிப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து வரும் பண்டிகைகளை முன்னிட்டு ஆவின் நிறுவனம் அதிரடி ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் பொதுமக்களின் தேவைக்காக உற்பத்தி செய்து வருகிறது.
இது பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனை மூலம் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் விசேஷ நாட்களில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விலையை குறைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
பலகாரங்களும், பட்சணங்களும் இல்லாமல் திருவிழாக்கள், பண்டிகைகள் கொண்டாட்டங்கள் நிறைவு பெறாது தானே? அதனால் நெய்யின் விலையில் ரூ.10 குறைக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை ரூ85க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 100 மிலி ஆவின் நெய் இன்று இரவு வரை ரூ.10 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.75க்கு விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது. இந்த சிறப்பு தள்ளுபடி செப்டம்பர் 1ம் தேதி துவங்கிய நிலையில், இன்று இரவு வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா