இன்று ஞாயிறு விடுமுறை கிடையாது... தலைமை அஞ்சலகத்தில் ஆதார் சேவை இயங்கும்... மிஸ் பண்ணாதீங்க!
Dinamaalai September 15, 2024 06:48 PM

இன்று செப்டம்பர் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கிடையாது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தலைமை அஞ்சலகம் இன்று முழு நாளும்  மாலை 5.30 மணி வரை ஆதார் பதிவு, திருத்த சேவைகளை மேற்கொள்வதற்காக இ யங்கும் என்று தூத்துக்குடி மாவட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்(பொறுப்பு) செ.சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கோங்க.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி - திருச்செந்தூர் பிரதான சாலையில் உள்ள தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் இன்று செப்டம்பர் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும்.

அரசு அறிவுறுத்தலின்படி 10 ஆண்டுகள் நிறைவுற்ற ஆதார் அட்டையினை புதுப்பித்துக் கொள்ளவும் மேலும் பணிக்கு செல்வோர் மற்றும் பள்ளிக் குழந்தைகளின் ஆதார் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும் பொதுமக்கள் இந்த சிறப்பு ஏற்பாட்டை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.