குரோம்பேட்டை, ராதாநகரை சேர்ந்த தீவிர விநாயகர் பக்தரான கட்டிட கலை நிபுணர் சீனிவாசன் கடந்த 17 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளுடன் இலவசமாக விநாயகர் சதுர்த்தியையொட்டி கண்காட்சியை நடத்தி வருகிறார். இந்த வருடம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தாம்பரம் அருகே சிட்லப்பாக்கம், கணேஷ் மகாலில் 21,000 விநாயகர் சிலைகளுடன் கூடிய கண்காட்சி தொடங்கியுள்ளது.
கண்காட்சியில் சிப்பிக்குள் முத்து போல பிள்ளையார், இருளிலும் மின்னும் ரேடியம் பிள்ளையார், திண்ணையில் படுத்து ஓய்வெடுக்கும் பிள்ளையார், சங்கு பிள்ளையார், சந்திராயன் பிள்ளையார், அத்திவரதர் விநாயகர், சொர்க்க வாசல் விநாயகர், ஸ்கூட்டர், சைக்கிள், கார், ரயில் ஓட்டும் விநாயகர், நர்த்தன கணபதி, காசியானந்த கணபதி என அரை இன்ச் உயரத்தில் இருந்து 8 அடி உயரம் வரையிலான பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, ஐம்பொன், இரும்பு, கண்ணாடி உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இடம் பெற்றுள்ளன. தினமும் காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் இந்த கண்காட்சியைப் பொதுமக்கள் இலவசமாக பார்த்து மகிழலாம்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா