அதனால பெளர்ணமி தினத்தில் வழிபட மறக்காதீங்க. குறிப்பாக முன்னோர் பூஜைகளையும், குல தெய்வ வழிபாட்டையும் பெளர்ணமி தினத்தில் செய்து வந்தால், அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். மாதத்தில் ஒரு நாள் பெளர்ணமி தினம் வருவது வழக்கம். வானில் முழு நிலவு பிரகாசமாகத் தோன்றும் அற்புதமான நாள். இந்த நாளில் செய்யப்படும் பிரார்த்தனைகள் நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்தும்.
இந்த தினத்தில் அம்பிகையை மனதில் வேண்டி வழிபாடு செய்வதும், பூஜை செய்வதும் மிகவும் சிறப்பானதாகும். இந்த நாளில் அம்பிகையின் அருளை முழுமையாக பெறலாம். பௌர்ணமி நாளில் வீட்டிலும், குலதெய்வ கோயிலிலும் விளக்கேற்றி வழிபாடு செய்யலாம்.
பௌர்ணமியில் அம்மன் கோவில்களில் விளக்குப் பூஜை, அன்னதானம், சிறப்புப் பூஜைகள் செய்து வரலாம். பெளர்ணமியன்று அம்மனை முழு மனதாக வழிபட்டு, எந்தவொரு காரியத்தைத் துவங்கினாலும் வெற்றி தான். மயிலை கற்பகம்மாள், திருவெற்றியூர் வடிவுடையம்மன், திருகடையூர் அபிராமி என சாந்தமான அம்மனை பெளர்ணமி தினங்களில் தொடர்ந்து வழிபட்டு வாருங்கள். உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஏதேனும் ஒரு அம்மன் கோயிலுக்கு தவறாம பெளர்ணமி தினத்தில் வழிபடுங்க. உங்க வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீங்க.
வீட்டில் வழிபடும் முறை
பௌர்ணமி தினத்தில் மாலை நேரத்தில் பெண்கள் இல்லத்தில் விளக்கேற்றி இயன்ற நைவேத்தியம் படைத்து குங்குமம் அல்லது மஞ்சள் கொண்டு 108 முறை அர்ச்சிக்க வேண்டும். இப்படி செய்வதால் மாங்கல்ய பலம் கூடும். நீடித்த ஆயுளும், ஆரோக்கியமும் கிட்டும். சந்தானப் பேறு, தனலாபம் பெருகும். கல்வியில் மேன்மை அடையலாம்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!