ஐபேட் மூலம் தாயுடன் சண்டையிட்டு ஜன்னலில் இருந்து குதித்து 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவில் பிராங்க்ஸ் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த 10 வயது சிறுமியின் மரணம் தொடர்பான சூழ்நிலைகளை கண்டறிய புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நிகழ்ந்த போதுசிறுமி வீட்டில் தனியாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முந்தைய நாள், சிறுமியும் அவரது தாயாரும், சிறுமி தொடர்ந்து ஐபாட் பயன்படுத்துவது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்ப் இன்னர் மாலை 4:30 மணியளவில் மருத்துவரைச் சந்திக்கச் சென்ற தாய், திரும்பி வந்தபோது தனது மகள் வீட்டின் முற்றத்தில் விழுந்துக் கிடப்பதைக் கண்டார்.
சிறுமி கீழே குதித்து தற்கொலைச் செய்து கொண்டாரா அல்லது ஜன்னல் அல்லது கூரையில் இருந்து விழுந்தாரா என்பதையும் கண்டறிய போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
சிறுமி கீழே விழுந்து கிடப்பதைக் கண்ட தாயார் உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். அதிகாரிகள், குழந்தைகள் சேவைகளுக்கான நிர்வாகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுடன், சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை கைதுகளோ குற்றச்சாட்டுகளோ எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!