தமிழகத்தில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நேரு நகரில் வசித்து வந்தவர் ரவி. இவருடைய மனைவி 58 வயது சாந்தி. இந்த தம்பதியின் மகன் சந்தோஷ். இவர்கள் ஒரு பூனையை ஆசையாக வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பூனை சம்பவத்தன்று வீட்டு வளாகத்தில் சுற்றித்திரிந்தது. அப்போது அங்கு கட்டுவிரியன் பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது. இதை கவனித்த பூனை, அந்த பாம்பை துரத்தி துரத்தி கடித்து விளையாடியது.
அந்த பாம்பை, வாயில் கவ்வி வீட்டில் உள்ள படுக்கை அறையில் போட்டுவிட்டு சென்றது. அந்த அறையில் சாந்தி அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். ஏற்கனவே பூனை கடித்த ஆத்திரத்தில் இருந்த பாம்பு அங்குமிங்கும் ஓடத் தொடங்கியது. பின்னர் தூங்கி கொண்டு இருந்த சாந்தியை கடித்துவிட்டது. இதனால் திடுக்கிட்டு எழுந்த சாந்தி, பாம்பு தன்னை கடித்ததை அறிந்து அலறித்துடித்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது மகன் சந்தோஷ், உடனடியாக சாந்தியை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சாந்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வளர்த்த பூனையே பெண்ணின் உயிருக்கு வினையான சம்பவம் அப்பகுதியில் பெரும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா