பகீர் வீடியோ... சொகுசு கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... மெட்ரோ தூணில் சொருகியதால் அதிர்ஷ்டவசமாக தப்பினார்!
Dinamaalai September 22, 2024 12:48 AM

இன்று செப்டம்பர் 21ம் தேதி சனிக்கிழமை அன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால், நொய்டா செக்டார்-25க்கு அருகே உள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் தூணில் பாய்ந்த ஸ்கூட்டியில் பயணித்த பெண், சிறிது நேரத்தில் அதிர்ஷ்டவசத்தால் தப்பினார் என்று போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து சமூக ஊடகங்களில் வெளியான இந்த சம்பவத்தின் வீடியோவில், உயரமான மேம்பாலத்தின் தூணிலிருந்து இரண்டு ஆண்கள் ஒரு இளம்பெண்னை மீட்க முயற்சிப்பதைக் காட்டுகிறது. மேலும் சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே ஏராளமானோர் திரண்டனர்.


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளம்பெண்னை காப்பாற்றினர். இளம்பெண்னை காப்பாற்ற முயன்ற 2 பேரும் தள்ளுவண்டி இயந்திரத்தின் உதவியுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மூவரும் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர், பெண்ணின் ஸ்கூட்டர் மீது மோதிய வாகனத்தை அவர்கள் பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர்.

போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர் இங்கு வந்து சிறுமியை பத்திரமாக மீட்டனர். ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலின் படி போலீசார், ஸ்கூட்டி மீது மோதிய சொகுசு காரைப் பறிமுதல் செய்து இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.