16 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்... கூட்டு பாலியல் கொடுமை.. மூன்று பேர் கைது...
கிஷோர் September 22, 2024 06:14 PM

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே, இயற்கை உபாதை தடுக்க சென்ற சிறுமி கூட்டு பாலியல் வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் 

கூட்டு பாலியல் வன்கொடுமை

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள கிராமத்தில், 11 ஆம் வகுப்பு பயின்றுவரும் 16 வயது பள்ளி மாணவி ஒருவர், கடந்த 18 ஆம் தேதி மாலை பள்ளி முடித்து வீடு சென்ற நிலையில், இயற்கை உபாதை கழிக்க திறந்தவெளி பகுதிக்குச் சென்றுள்ளார். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மற்றும் 23 வயது இளைஞர் உள்ளிட்ட 3 பேர் மாணவியிடம் பேச்சு கொடுத்து தூக்கிச்சென்று காட்டுப் பகுதியில் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, வீடு திரும்பிய மாணவி அவரது தந்தையிடம் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மாணவியை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மற்றும்  கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் தீவிர விசாரணை 

இது தொடர்பாக புகாரின் அடிப்படையில் தாழம்பூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர் .‌ உடனடியாக தாம்பரம் கமிஷனர் உத்தரவின் பேரில் உதவி ஆணையாளர் வெங்கடேசன், ஆய்வாளர் சார்லஸ், உதவி ஆய்வாளர் சுந்தர் உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் குறித்து விசாரணையை தொடங்கினர். இந்த சம்பவத்திற்கு பிறகு குற்றச்செயலில் ஈடுபட்டவர் தலைமறைவானார்கள். தொடர்ந்து தலைமறைவானவர்களை தேடும் பணி முடக்கிவிடப்பட்டது.

மூன்று பேர் கைது

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய மூன்று பேரும் தலைமறைவான நிலையில், தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர், 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மற்றும் சுந்தர் 23 வயது நபர் ஆகிய மூன்று பேரையும் காட்டுப்பகுதியில் வைத்து கைது செய்தனர். அவர்களைக் கைது செய்து சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்தநிலையில் கைது செய்து விசாரித்தபோது, பாலியல் வன்கொடுமை குற்றவாளி சுந்தர் கீழே விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டது. இது தொடர்பாக 16 வயது சிறுவர்கள் இருவர் மீதும் மற்றும் சுந்தர் ஆகியோர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறுவர்கள், சிறுவர் கூர்நோக்கு இல்லத்திலும் மற்றும் கைதான இளைஞர் சுந்தர் புழல் சிறையிலும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.