12வது தேர்ச்சியடைந்தவர்களுக்கு ரயில்வேயில் 3,445 காலிப்பணியிடங்கள்... உடனே அப்ளை பண்ணுங்க!
Dinamaalai September 22, 2024 06:48 PM

12வது தேர்ச்சியடைந்தவர்கள் இந்தியன் ரயில்வே துறையில் காலியாக இருக்கும் 3,445 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியாகி உள்ள நிலையில், வரும் அக்டோபர் மாதம் 20ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பைத் தவற விடாமல் உடனே அப்ளை பண்ணுங்க. மொத்த காலி பணியிடங்கள்: 3445 


பணி விவரம்: கமர்ஷியல் - டிக்கெட் கிளார்க், கணக்கு எழுத்தர் - டைபிஸ்ட், ஜூனியர் கிளார்க் - டைபிஸ்ட் & டிரெயின் கிளார்க்  ஆகிய  பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.  
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி 
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். 18 வயது முதல் 33 வயது  


தேர்வு முறை: கணிணி வழி எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை நடைபெறும்.   

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம் 

கால அவகாசம் : 21.09.2024 முதல் 20.10.2024 வரை 

இது குறித்த மேலதிக தகவல்களுக்கு  https://www.rrbchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.