செங்கல்பட்டு உலுக்கிய கொடூர கொலை.. வாக்கிங் சென்றவர் வெட்டி படுகொலை.. நடந்தது என்ன ?
கிஷோர் September 22, 2024 07:44 PM

செங்கல்பட்டு புலிப்பாக்கம் பகுதியில், அதிகாலையில் நடைபெற்று சென்றவர் மர்மமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கும், சம்பவம் அதிர்ச்சியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அடையாளம் தெரியாதவர் கொலை

செங்கல்பட்டு மாவட்டம் புலிப்பாக்கம் பல்லவன் கார்டன் அடுத்த மகாலட்சுமி நகர் பகுதிகளில் குடியிருப்பு இல்லாத வீட்டு மனையில், அடையாளம் தெரியாத நபர் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருப்பதாக செங்கல்பட்டு மாவட்ட போலீசாருக்கு அவ்வழியாக சென்ற, பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு செங்கல்பட்டு தாலுகா போலீசார் விரைந்து வந்தனர். கேட்பாரற்று இருந்த உடலை கைப்பற்றிய செங்கல்பட்டு தாலுகா போலீசார் உடனடியாக, உடற்கூறாய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உயிரிழந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர் ‌.

விசாரணையில் வெளிவந்த உண்மைகள்

செங்கல்பட்டு தாலுகா போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் , சம்பந்தப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது ‌ . எனவே இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை துவக்கினார். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், செங்கல்பட்டு அடுத்துள்ள புலிப்பாக்கம் மதுரை வீரன் கோயில் தெரு பகுதியை சேர்ந்த, நாகூரான் என்பவரது மகன் சரவணன் (39) என்பது விசாரணையில் தெரியவந்தது .

புலிப்பாக்கம் பகுதியை சேர்ந்த சரவணன் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு விபத்தில், காயமடைந்து தற்போது பிசியோதெரபி சிகிச்சை மேற்கொண்டு வருவதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தினமும் புலிப்பாக்கம் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து, அருகில் இருக்கும் காந்தளூர் சாலையில் வழியாக நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இன்று அதிகாலை 5 மணிக்கு தனது வீட்டிலிருந்து சென்ற சரவணன் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.

கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை

இதனை அடுத்து சரவணனின் வீட்டிற்கு தகவல் தெரிவித்தபோது, கொலை செய்யப்பட்ட நபர் சரவணன் என்பதை குடும்பத்தினர் உறுதி செய்தனர். உடலில் பல்வேறு வெட்டு காயங்களுடன் இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த நபர் தினமும் செல்லக்கூடிய இடம் , என்பதால் இரு திட்டமிட்டு நடைபெற்ற கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். முன் பாகை காரணமாக இந்த கொலை நடைபெற்றதா என்று கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதிகாலையில் வாக்கிங் சென்றவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம், செங்கல்பட்டு பகுதியில் அதிர்ச்சியை பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இது குறித்து காவல்துறையிடம் தொடர்பு கொண்டு விசாரித்த போது : உடலை கைப்பற்றி கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். தினமும் நடைப்பயிற்சிக்கு செல்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பதால் இது திட்டமிட்ட கொலை என்ன தெரியவந்துள்ளது. அவரது தொலைபேசியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம் . முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில், விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.‌

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.