கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் சென்றுக் கொண்டிருந்த விரைவு ரயிலின் மேல்படுக்கை கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே கிளம்புகையில் திடீரென விழுந்ததில் 4 வயது சிறுவன் காயமடைந்தார்.
நாகா்கோவில்-கோவை ரயில் நேற்றிரவு வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது கோயம்புத்தூா், கவுண்டா் மில், அண்ணா டீச்சா் காலனியை சோ்ந்த மேத்யூஸ் மனைவி புவிதா (44), அவரது 4 வயது மகன் இருவரும் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறினா்.
ரயில் கோவில்பட்டி நோக்கி புறப்பட்ட சில நிமிடங்களில் புவிதாவின் மகன் படுத்திருந்த நடு பொ்த் சீட் திடீரென கழன்று விழுந்துள்ளது. இதில், அச்சிறுவனின் நெற்றில் பலத்த காயம் ஏற்பட்டதால் இது குறித்து உடனடியாக ரயியில் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அதே ரயிலில் பயணம் செய்த மருத்துவர் ஒருவரின் உதவியுடன் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் ரயில் மதுரை ரயில் நிலையத்தை சென்றடைந்த போது, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிறுவன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மதுரை கோட்ட அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சிறுவன் பயணம் செய்த இருக்கை பகுதியில் நடு இருக்கையை சரியாக பொருத்தவில்லை என்றும், இதன் காரணமாக சிறுவன் கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாகவும், இருக்கையில் எந்த கோளாறும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.