“சுள்ளான்கள் எல்லாம் அடுத்த எம்ஜிஆர் ஆக முடியாது”… தமிழகத்தில் திமுக அதிமுக மட்டும் தான்… விஜயை சீண்டிய ராஜேந்திர பாலாஜி..!!
SeithiSolai Tamil October 19, 2024 01:48 AM

அதிமுக கட்சியின் 53 ஆம் ஆண்டு துவக்க விழா இன்று திருத்தங்கல்லில் நடைபெற்ற நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, லட்சக்கணக்கான தொண்டர்களின் வியர்வையிலும், ரத்தத்திலும் மலர்ந்த கட்சி தான் அதிமுக. இன்றைக்கு புதிதாக கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்த சுள்ளான்கள் எல்லாம் நான்தான் அடுத்த எம்ஜிஆர் என்று கூறுகிறார்கள். அதெல்லாம் ஒருபோதும் நடக்கவே நடக்காது. அவர்கள் எல்லோரும் 30 நாட்களில் காணாமல் போய்விடுவார்கள். தமிழகத்தை பொறுத்தவரை எப்போதும் அதிமுக மற்றும் திமுக மட்டும் தான்.

அடுத்து வரும் தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவிற்கு மட்டும்தான் போட்டி. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எல்லாம் களத்தில் கிடையாது. தற்போது 51 வயதாகும் அதிமுக கட்சியின் 31 வருடங்கள் ஆட்சி செய்த கட்சி என்று பெருமையை பெற்றுள்ளது என்று கூறினார். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தற்போது புதிதாக அரசியலுக்கு வந்துள்ள நிலையில் அவரை அடுத்த எம்.ஜி.ஆர் என்று புகழும் நிலையில் நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்து தற்போது அரசியலுக்கு வந்த சுள்ளான்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆக முடியாது என்று ராஜேந்திர பாலாஜி விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.