இன்றே கடைசி... 12வது பாஸானவர்களுக்கு ரயில்வேயில் 3,445 காலி பணியிடங்கள்!
Dinamaalai October 20, 2024 12:48 PM

 
இது  மிகப் பெரிய வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க. கடைசி நிமிஷம் வரைக்கும் தள்ளிப் போடாதீங்க. விண்ணப்பங்களை சமர்பிக்க நாளை கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12வது தேர்ச்சியடைந்தவர்களுக்கு இந்திய ரயில்வே துறையில் காலியாக இருக்கும் 3,445 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்புக்கு திறமையும், தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து, அதற்கான கடைசி தேதியாக அக்டோபர் 20ம் தேதியை நிர்ணயித்துள்ளது. உடனடியாக அப்ளை பண்ணுங்க. 


பணி விவரம்: கமர்ஷியல் - டிக்கெட் கிளார்க், கணக்கு எழுத்தர் - டைபிஸ்ட், ஜூனியர் கிளார்க் - டைபிஸ்ட் & டிரெயின் கிளார்க்  ஆகிய  பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.  
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி 
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். 18 வயது முதல் 33 வயது  


தேர்வு முறை: கணிணி வழி எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை நடைபெறும்.   

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம் 

கால அவகாசம் : 20.10.2024 கடைசி தேதி

இது குறித்த மேலதிக தகவல்களுக்கு  https://www.rrbchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.