பொதுவாக ரத்த சோகை வந்துவிட்டால் நம் உடலுக்கு முழுமையான அளவு ஆக்சிஜென் கிடைக்காது.இந்த ரத்த சோகையை எப்படி குணமாக்கலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம் .
1.இதனால் மயக்கம் ,தலை சுற்றல் ,உடல் சோர்வு ,படபடப்பு ,மூச்சிரைத்தல் உண்டாகும் .
2.மேலும் சில கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ நேரத்தில் இதனால் உயிரிழப்பு கூட உண்டாகும் .
3.இரத்த சோகை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு வரக்கூடிய நோயாகும் .
4.உடலில் சிலருக்கு அயன் சத்து கம்மியாக இருக்கும் .இந்த இரும்புச்சத்து குறைபாடு பலருக்கு இரத்த சோகையை ஏற்படுத்துகிறது.
5.உலர் திராட்சை இந்த பிரச்சனைக்குமுழுமையான தீர்வு வழங்குகிறது. இதில் இரும்புச்சத்துடன் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன.
6.தினம் இரவே 10-15 உலர் திராட்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்துவிடுங்கள் , பின்னர் அதிகாலையில் தண்ணீருடன் இந்த ஊறவைத்த திராட்சையை சாப்பிடுவது நல்லது.
7.இதன் மூலம் இரும்புச்சத்து குறைபாட்டை குறைகிறது. இதன் விளைவாக இரத்த சோகை குறைகிறது.