கிருஷ்ணகிரி: என்.சி.சி. முகாம் - பாலியல் தொல்லை! தமிழக அரசு இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல்!
Seithipunal Tamil October 24, 2024 07:48 AM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் போலி என்.சி.சி.முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 

பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளிலும் இடைக்கால குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தகவல் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக ₹1.63 கோடி மாவட்ட மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும்  உயர் நீதிமன்றத்தில் தகவல் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட 4 பள்ளிகளிலும் போலி என்.சி.சி. முகாம் எப்படி நடத்தப்பட்டது? என்ன உள்நோக்கம்? என்பது தொடர்பாக விரிவாக விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர். 
 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.