தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ் பவர் தல அஜித். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களிலும் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார். அதன் பிறகு அனிருத் இசையமைக்கிறார். இந்த படங்களின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது அஜித் புதிதாக கார் ரேஸ் நிறுவனம் ஒன்றினை தொடங்கியுள்ளார்.
இந்த நிறுவனத்தின் பெயர் மற்றும் உரிமையாளர்கள் விவரம், ரேசர்கள் ஆகியோர்கள் குறித்த அறிவிப்பு சமீபத்தில் முறையாக வெளியிடப்பட்டது. நடிகர் அஜித் துபாயில் நடைபெற உள்ள கார் ரேஸில் கலந்து கொள்ள இருக்கிறார். அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு கார் ரேசில் கலந்து கொள்வது அவர் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதிதாக கார் ரேஸ் நிறுவனம் ஒன்று தொடங்கிய அஜித் இனி முழு நேரமும் அதில் கவனம் செலுத்த இருப்பதாக தகவல் ஒன்று வந்துள்ளது.
இதன் காரணமாக படங்களில் நடிப்பதை அஜித் படிப்படியாக குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்து சினிமாவில் இருந்து விலகப்போவதாகவும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ வெளிவரவில்லை. ஏற்கனவே நடிகர் விஜய் தளபதி 69 திரைப்படத்திற்கு பிறகு படங்களில் நடிக்க மாட்டேன் எனவும் இதுதான் தன்னுடைய கடைசி படம் என்றும் கூறியுள்ளார். பொதுவாக விஜய் மற்றும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் இருவரின் படங்களும் ஒன்றாக வெளிவந்தால் ரசிகர்களுக்கு திருவிழா தான்.
மேலும் யார் படம் நன்றாக இருக்கிறது? யார் பெரிய நடிகர் எல்லாம் என்று கூறி ரசிகர்கள் தங்களுக்குள் மோதலில் ஈடுபடுவார்கள். இருப்பினும் தல மற்றும் தளபதி கெத்து தான் என்ற வகையில் ரசிகர்கள் உற்சாகமாக படங்களை கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால் இப்படி இருக்கையில் தற்போது தல மற்றும் தளபதி இருவரும் சினிமாவை விட்டு விலகினால் அடுத்து என்ன நடக்கும் என்பது யோசித்துப் பார்க்க முடியாத ஒரு விஷயம். இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.