பொதுவாக எல்லாப் பெண்களுக்கும் திருமணத்திற்குப் பிறகு கணவன் வீட்டிற்குச் செல்ல வேண்டிய நிலைதான். திருமணம் முடிந்து செல்லும் மணப்பெண்ணை, குடும்பத்தாரால் கண்ணீருடன் அனுப்பப்படுவார். ஆனால், திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு செல்ல மறுத்த இளம்பெண்ணை அவரது குடும்பத்தினர் குண்டு கட்டாக தூக்கிச் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், மணமகள் கோலத்தில் இருக்கும் இளம்பெண் ஒருவர் திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு செல்ல மறுத்துள்ளார். குடும்பத்தினர் அவரை சமாதானம் செய்து வாசலுக்கு அழைத்து வந்தனர். ஆனால், மணமகன் வீட்டிற்கு செல்ல மறுத்துள்ளார். இதனால் பொறுமை இழந்த குடும்பத்தினர் இளம்பெண்ணை குண்டு கட்டாக தூக்கிச் சென்று காரில் ஏற்றியுள்ளனர்.
இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே குடும்பத்தைப் பிரிந்து துக்கத்தில் இருக்கும் அவரை வலுக்கட்டாயமாக அனுப்புவது அவரது மனநிலையைப் பாதிக்கும். இந்தியாவில் பிறந்த பெண்களுக்கு உணர்வுகள் இருக்க வேண்டாமா? ஏன் இந்த கட்டாயமாக அனுப்பும் நிகழ்வு நடைபெறுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.