திருமண நிகழ்வில் சோகம்... கார் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு!
Dinamaalai October 28, 2024 02:48 AM

திருமண நிகழ்வில் பங்கேற்று விட்டு திரும்பிய போது கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேற்றிரவு ஹிமாச்சல பிரதேசத்தில் பரூட்டில் நடந்த திருமண நிகழ்வில் பங்கேற்று விட்டு ஒரே காரில் 6 பேர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அருகே இருந்தத 700 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலியானவர்களுக்கு 16 வயது முதல் 30 வயது இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இரவு நேரம் என்பதால் விபத்து நிகழ்ந்தது குறித்து யாருக்கும் தெரியவில்லை. மறுநாள் ஆடு மேய்ப்பவர்கள் கார் விபத்து குறித்து பஞ்சாயத்து தலைவர் மூலம், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், விரைந்து வந்த போலீசார், உள்ளூர் மக்களின் உதவியுடன் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.