திருவள்ளூர் மாவட்டம் கீழந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லதா(50). இவரது மகன் பிரகாசம்(25) மகள் பிரியா(23) ஆகியோர் சென்னையில் உள்ள உறவினர் தங்கி இருப்பதால் லதா தனது தாய் செல்வராணியுடன்(71) வசித்து வந்தார். சில மாதங்களாக லதாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு லதாவுக்கும் செல்வராணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த லதா தனது தாயை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த செல்வராணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த லதா திடீரென ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.