சீமான் வீட்டில் களேபரம் - 2 வழக்குகள் பதிவு
Top Tamil News February 28, 2025 01:48 AM

சீமான் வீட்டின் காவலாளி மற்றும் உதவியாளர் காவலர்களை தாக்கி, துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக போலீசார் தரப்பில் 2 புகார்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இரண்டு புகார்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.


பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டினர். மேலும் சீமான் நாளை காலை விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட போலீசாரின் சம்மனை கிழித்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அமல்ராஜ் மற்றும் போலீசாரை தாக்கியதுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறி சீமான் வீட்டின் காவலாளியையும் போலீசார் கைது செய்தனர். 

இந்நிலையில் சீமான் வீட்டில் நடைபெற்ற களேபரம் தொடர்பாக 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது காவல்துறை. சீமான் வீட்டு காவலாளி துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக காவலர் புகார் அளித்த நிலையில், காவலர்களை தாக்கியதாகவும், துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.