‘காலம் பொன் போன்றது’. இது நம்மோட காலம் முழுக்க போன பிறகு தான் கடைசியில தெரியும். அப்போ திருந்தி வாழலாம்னா அப்புறம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமான்னு கேட்பாங்க. அதனால நீங்க நேரத்தை வீணாக்குறீங்களா இல்லையான்னு இப்பவே தெரிஞ்சிக்கோங்க. என்னன்னு பார்க்கலாமா…
பாத்ரூமுக்குள் செல்போன் பயன்படுத்துவது, காலையில் குறிப்பிட்ட நேரம் எழ முடியாமல் போவது. வேளைக்கு உணவு அருந்தாமல் தவிர்ப்பது. சிறிய விசயத்திற்கும் ஓவரா கோபப்படுவது. தட்டில் இருக்கும் உணவு என்ன என்று கூட தெரியாமல் சாப்பிட்டு முடிப்பது. நாளை என்ன தேதி என்று கூட தெரியாமல் இருப்பது. நேரத்திற்கு தகுந்தாற்போல் முடிவை மாற்றிக்கொள்வது
திட்டமிடாத பயணம், ஆபாச வலைத்தளம், தேவை இல்லாமல் வெட்டியாக கண்விழித்து காலை 4 மணிக்கு தூங்க செல்வது, எந்த வேலை செய்வதற்கும் ஒருவேளை வரும் என்று காலவரையற்று தள்ளிப்போடுவது, குறிப்பிட்ட வேலை செய்து முடிக்காமல் தப்பிக்க தகுந்த காரணம் தேடுவது, இன்று ஒருநாள் மட்டும் என்று தினமும் சொல்லிக்கொள்வது.
நீங்கள் செய்வது தவறு என்று தெரிந்தும் ஒப்பு கொள்ளாத மனநிலை, எக்காலத்திற்கும் உதவாத கட்டுப்பாடற்ற சுயஇன்பம் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், நாளை என்பதை நாளை பார்த்துக்கொள்ளலாம் என்னும் மனநிலை. சமூக வலைதளத்தில் வருவதை எல்லாம் வரிசையாக பார்த்துக்கொண்டே செல்வது. இன்று தேவை எவ்வளவு என்று அதற்கு மட்டும் வேலை பார்ப்பது.
மேலே குறிப்பிட்ட அனைத்தயும் ஒரு சிறிய விசயத்தை கடைபிடிப்பதன் மூலம் மாற்றி கொள்ளலாம் , நாளை என்ன செய்யவேண்டும் என்று இன்று இரவு ஒரு சிறு குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் , இரவு’10.30மணிக்குள் படுத்துவிடுங்கள். 5 நாட்களுக்கு காலை 6 மணிக்கு எழுந்து கொள்ளுங்கள், அப்போது தெரியும் ஒருநாள் எவ்வளவு நீண்டது என்று.
கூடுமானவரை தனக்கு தான் செய்து கொண்டுஇருக்கும் வேலை வீணானது என்று தோன்றும்வரை நம் செயலுக்கான காரணம் நம்மால் கொடுக்கமுடியும். ஆனால் விளைவுகளை புரிந்து கொண்டு சற்று திருத்திக்கொண்டால் ஒருமுறை வாழும் இந்த விலைமதிப்பில்லாத வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி கொள்ளலாம்.