தொழிலாளர் தினம், அக்ஷய திருதியை முன்னிட்டு மே 3 வரை வங்கிகள் தொடர் விடுமுறை!
ET Tamil April 28, 2025 03:48 AM
நீங்கள் நாளை வங்கிக்குச் செல்ல திட்டமிருந்தால், முதலில் வங்கி நாளை இயங்குமா, இயங்காதா என்பதை அறிந்துகொண்டு செல்லவும். ஏனெனில் வங்கி விடுமுறை அறிக்கைகளின்படி ஏப்ரல் 26 மற்றும் 27 இரு நாட்களும் நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறையாக உள்ளன. இந்நிலையில் சில மாநிலங்களில் ஏப்ரல் 28 தொடங்கி 30 வரை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சில மாநிலங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாடு வங்கிகளுக்கு விடுமுறையா, என்ன காரணத்தால் வங்கிகள் விடுமுறையாக உள்ளன என்பதை இனி பார்க்கலாம். ஏப்ரல் வங்கி விடுமுறைகள்!ஏப்ரல் 28 அன்று வங்கிகள் வழக்கம்போல செயல்படும். ஆனால் ஏப்ரல் 29 அன்று பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு, இந்திய ரிசர்வ் வங்கி, வங்கி விடுமுறை அறிக்கைகளின்படி இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறையாக உள்ளது. இந்த நாளில் இமாச்சல பிரதேச வங்கிகள் மட்டும் மூடப்பட்டிருக்கும், மற்ற வங்கிகள் வழக்கம்போல செயல்படும். இந்நாளில் தமிழக வங்கிகளுக்கு விடுமுறை இல்லை. அக்ஷய திருதியை வங்கி விடுமுறை!ஏப்ரல் 30 அன்று, பசவ ஜெயந்தி மற்றும் அக்ஷய திருதியை முன்னிட்டு கர்நாடக வங்கிகள் மூடப்பட்டிருக்கும். கர்நாடாகாவில் அக்ஷய திருதியை ஒரு சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது, அதனால் அந்தாளில் மக்கள் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டமாக நினைப்பர். மற்ற வங்கிகள் வழக்கம்போல செயல்படும். தமிழக வங்கிகள் செயல்படும் ஆன்லைன் வங்கி சேவைகள், ஏடிஎம் சேவைகள் கிடைக்கும்!ஏப்ரல் 26 முதலே வங்கிகள் விடுமுறையாக இருந்தாலும், அனைத்து வங்கி ஆன்லைன் சேவைகள் மற்றும் ஏடிஎம் சேவைகள் கிடைக்கும். வங்கிக்கு நேரடியாக செல்ல திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே சிரமமாக இருக்கும். மே 1 தொழிலாளர் தினத்தில் வங்கி விடுமுறை!மே 1, 2025 அன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தினத்தில் குஜராத் தினம் மற்றும் மகாராஷ்டிரா தினம் காரணமாகவும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.