சூப்பர் அறிவிப்பு..! மாணவர்களுக்கு மாதம் ரூ.8050 உதவி தொகை.!
Newstm Tamil May 09, 2025 01:48 PM

சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  

மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சென்னை மற்றும் இந்திய அரசு, தென்மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இயக்ககம் இணைந்து ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பல்வேறு தொழிற் பிரிவுகளை சேர்ந்த பயிற்சியார்களுக்கு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்குவதற்காக, மாவட்ட அளவிலான தேசிய தொழிற்பழகுநர் முகாம் (PM National Apprenticeship Mela வருகிற 13.05.2025 அன்று காலை 9.00 மணியளவில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கிண்டியில் நடைபெற உள்ளது. 

இதில் அரசு மற்றும் தனியார் தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்க ஐ.டி,ஐ, படித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 8, 10. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை தொழிற் பழகுநராக தேர்வு செய்ய உள்ளனர். தற்போது தொழிற் பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக குறைந்த பட்சம் ரூ.8050/- மற்றும் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் (National Apprenticeship Certificate) வழங்கப்படும். 

இதுவரை தொழிற் பழகுநர் பயிற்சி (NAC) முடிக்காத அரசு, தனியார் தொழிற் நிலையங்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள்  www.apprenticeshipindia gov.in இணையதள முகவரியில் பதிவு செய்து அசல் கல்வி சான்றிதழ்களுடன் இந்த முகாமில் கலந்து கொள்ளுமாறு கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.