இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் இன்று 4வது நாளாக தொடர் பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பாரமுல்லா மாட்டம் உரி பகுதியில் நர்கிஸ் பானு ( 45) என்ற பெண் உயிரிழந்தார். அதேபோல், பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஒரு நபர் உயிரிழந்தார். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.