அலுவலகத்தில் காதலியுடன் உடலுறவுக்குப் பின் உயிரிழந்த ஊழியர்... பணியின் போது உயிரிழந்ததாக நீதிமன்றம் தீர்ப்பு!
Dinamaalai May 13, 2025 12:48 PM

சீனாவில், தொழிற்சாலை ஒன்றில் தனது காதலியுடன் உடலுறவு  கொண்டிருந்த ஊழியர் ஒருவர், உடலுறவுக்குப் பின்னர் உயிரிழந்த நிலையில், அவர் பணியின் போது மரணமடைந்ததாக தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்.. அவரது குடும்பத்தினருக்கு அதற்கான பலன்களையும் தர அறிவுறுத்தியுள்ளது. 

சீனாவின் பீஜிங் நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பாதுகாவலராக பணியாற்றிய 60 வயது நபர் ஒருவர், பணி நேரத்தில் தனது காதலியுடன் உடலுறவில் ஈடுபட்டபோது உயிரிழந்தார். இந்த மரணம் தொடர்பான வழக்கில், நீதிமன்றம் இது "தொழில்துறை விபத்து" என தீர்ப்பளித்துள்ளது.

பாதுகாவலராக பணியாற்றிய சாங், அக்டோபர் 6, 2014 அன்று பாதுகாப்பு அறையில் ஓய்வெடுக்கும் போது, தனது காதலியுடன் உடலுறவில் ஈடுபட்ட நிலையில் மரணம் அடைந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரித்ததில், மரணம் சந்தேகத்துக்கிடமில்லாமல் இயற்கையானது என உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மகன் சாங் ஷியாஷி, தந்தையின் மரணம் பணியிடம் தொடர்புடையது எனக் கூறி, தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு துறையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.

"தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில், தந்தை பணி இடத்திலேயே காதலியை சந்தித்தார். ஒரு ஆண் மனிதராக அவருடைய உணர்வுப் பொறுப்புகள் இயல்பானவை. வேலை இடத்தில் ஏற்பட்ட மரணம் தொழில்துறை விபத்தாகவே வகைப்பட வேண்டும்" என அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவின் தொழிலாளர் காப்பீட்டு விதிமுறைகளைப்போல், சீனாவின் தொழில்துறை காயம் மற்றும் மரணக் காப்பீட்டு சட்டங்களின்படி, பணி நேரத்தில் வேலைக்காரருக்கு ஏற்பட்ட மரணம் தொழில்துறை விபத்தாக கருதப்படுகிறது. இந்த அடிப்படையில் நீதிமன்றம் சாங் ஷியாஷியின் தரப்பில் தீர்ப்பு வழங்கி, அவரின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

அப்போதைய சமூக பாதுகாப்புத் துறையும் தொழிற்சாலை நிர்வாகமும் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்தாலும், உயர் நீதிமன்றம் அந்த தீர்ப்பை உறுதி செய்தது. கடந்த 2017ல் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணத்தில், சாங் அவர்களின் மரணம் தொழில்துறை விபத்து என வகைப்படுத்தப்பட்டதாகவும், குடும்பத்துக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது..

 
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.