“ஊஞ்சல் விளையாடிய 3-ம் வகுப்பு சிறுவன்”… திடீரென சாய்ந்து விழுந்த கல்தூண்… அடுத்து நடந்த விபரீதம்… கதறும் பெற்றோர்…!!!
SeithiSolai Tamil May 18, 2025 03:48 PM

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை அருகே மணப்பாக்கம் கிராமத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி பூர்விக் என்ற 9 வயது மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் ஒரு தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். இவர்களது பக்கத்து வீட்டில் ஒரு சிமெண்ட் கல் தூணில் ஊஞ்சல் இருந்தது. இந்த ஊஞ்சலில் அமர்ந்து நேற்று பூர்விக் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென அந்த கல்தூண் சாய்ந்து சிறுவன் மீது விழுந்தது.

இதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டான். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.