சென்னை ராயப்பேட்டையில் நடு ரோட்டில் பள்ளி மாணவியிடம் காதலிக்க கூறி, தலைமுடியைப் பிடித்து தாக்கி வாலிபர் ஒருவர் மிரட்டி உள்ளார். இதனைப் பார்த்து அங்கு இருந்தவர்கள் அவரை பிடிக்க முயன்ற போது அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதையடுத்து அந்த மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி காவல்துறை நடத்திய விசாரணையில் குற்றவாளி அதிமுக பிரமுகர் சூர்யா (18) என்பது தெரியவந்தது. இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காரில் மது விற்ற வழக்கில் கைதாகி அதன் பிறகு ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
தனது மாமா அதிமுக வட்ட துணைச் செயலாளர் கானா ஆறுமுகத்தின் பெயரைக் கூறி அப்பகுதியில் மாமுல் வசூல் மற்றும் பிரியாணி இலவசமாக கேட்டு மிரட்டியதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.