தமிழக மீனவர்களின் படகு மீது மோதி ரூ2. லட்சம் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்படை பறித்துச் சென்று மீண்டும் அராஜக செயலில் ஈடுபட்டுள்ளது.
நாகை மீனவர்களின் மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றது. செருதூரை சேர்ந்த முருகேசன் என்பவரது பைபை படகில் கோடியக்கரை தென் கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகளை அறுத்தும் எரிபொருளை பறித்தும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.