'இசைஞானி' இளையராஜாவின் கச்சேரி வரும் ஜூன் மாதம் 7 தேதி கோவைபுதூர் பகுதியில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் நடைபெறும். பல்வேறு காரணங்களால் தாமதமாகி சென்ற இந்த நிகழ்ச்சி ஒருவழியாக அடுத்த வாரம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
கோவையில் மற்றுமொரு பிரம்மாண்ட இசை கச்சேரியும் அதற்கு அடுத்த மாதம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை 19ம் தேதி அன்று கோவை கொடிசியா மைதானத்தில் 'தேனிசை தென்றல்' தேவா அவர்களின் இசை கச்சேரி நடக்க உள்ளது.
1990கள் முதல் 2000கள் என்ற ஆண்டு காலங்கள் வரை "காத்தடிக்குது காத்தடிக்குது" போன்ற கானா பாடல்கள், "உன் பேர் சொல்ல ஆசைதான்" போன்ற மெல்லிசை பாடல்கள் வரை பல்வேறு இசை பிரிவுகளில் தேவா அவர்கள் இசை பிரியர்களை கட்டிபோட்டவர். இவரின் இசை கச்சேரியும் தொடர்ந்து நடைபெறவுள்ளதால் கோவை மக்களுக்கு அடுத்த 2 மாதமும் இசை விருந்துக்கு பஞ்சமில்லை.