லிபியாவில் வசித்து வருஅப்வர் அமீர் அல் மஹ்தி. இந்த இளைஞர், இஸ்லாமியர்களின் முக்கியமான கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணத்தை மேற்கொள்ள மக்காவிற்கு செல்ல தயாராகி கொண்டிருந்தார். இவரது பயணம் லிபிய அரசாங்கத்தின் மானியத் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், சப்ஹா விமான நிலையத்தில், அவரது பாஸ்போர்ட்டில் உள்ள "அல் மஹ்தி" என்ற பெயர் பாதுகாப்பு சோதனைகளில் தாமதம் ஏற்பட்டது.
இதனால், அமீர் விமானத்தை தவறவிட்டார். ஏமாற்றத்துடன் விமான நிலையத்தில் காத்திருந்த அமீர், தனது ஹஜ் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என கவலையுடன் அச்சமும் சேர்ந்து கொண்டது. அதே நேரத்தில் அவர் விடாமல் நம்பிக்கையுடன் அங்கேயே தங்கினார். ஆச்சரியமாக, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் சப்ஹா விமான நிலையத்திற்கு திரும்பிவிட்டது.
ஆனால், நீங்கள் இப்போது பயணம் செய்யமுடியாது என்பது போல அமீருக்கு அதிகாரிகள் விமானத்தில் பயணிக்க தடை விதித்ததார்கள். இதனால் மீண்டும் வருத்தத்துடன் அமீர் காத்திருந்தார். அவரை விட்டுவிட்டு விமானம் சென்ற நிலையில், விமானம் 2 வது முறையாகவும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திரும்பி வந்தது.
இந்த முறை, விமானி மற்றும் விமான நிலைய அதிகாரிகள், அமீரின் உறுதியையும், இந்த அசாதாரண சம்பவங்களையும் கருத்தில் கொண்டு, அவரை விமானத்தில் ஏற அனுமதி வழங்கினர். விமானி, "அமீர் இல்லாமல் இந்த விமானம் மீண்டும் புறப்படாது," எனக் கூறியதாகவும், இது அமீருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் அளித்தது. விமானத்தில் ஏறியபோது, மற்ற பயணிகள் அவருக்கு கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். இது குறித்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.