இந்தியா மே 7 அன்று தொடங்கிய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை அடுத்து பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஆழ்ந்த வருத்தத்துடன் இரங்கல் தெரிவித்த கொலம்பியா, தற்போது இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டை உறுதியாக ஆதரிக்கும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொலம்பியாவுக்கு காங்கிரஸ் எம்.பி. சஷி தரூர் தலைமையில் எம்பிக்கள் குழு சென்ற நிலையில், கொலம்பியாவின் பாகிஸ்தான் மரணத்திற்கு தெரிவித்த இரங்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில் சசிதரூரின் பேச்சுக்கு பின் கொலம்பிய முந்தைய அறிக்கையை திரும்பப் பெற்றுள்ளது. இப்போது கொலம்பியா இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதியாக ஆதரிக்கும் வகையில் புதிய அறிக்கையை வெளியிடவுள்ளனர்,” என சசிதரூர் இன்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இந்தியாவின் முன்னாள் தூதுவரும், பாஜகவின் மூத்த தலைவரும் ஆன தரன்ஜீத் சிங் சந்தூ கூறியதாவது: “இன்று காலை கொலம்பியாவின் தற்காலிக வெளியுறவுத்துறை அமைச்சருடன் நாங்கள் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்களுக்கு நிகழ்வுகளின் காலவரிசையை எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கினோம் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் கொலம்பியாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோசா யோலண்டா வில்லவிசென்சியோ இதுகுறித்து கூறியபோது “இன்று நாங்கள் பெற்ற விளக்கங்கள் மற்றும் தற்போதைய உண்மை நிலைமையை பற்றிய விரிவான தகவல்களின் அடிப்படையில், தொடர்ந்து ஆலோசனை செய்வோம் என்பதை நாங்கள் உறுதியாக தெரிவித்து கொள்கிறோம் என்றார். சசிதரூரின் கண்டனத்திற்கு பிறகு கொலம்பியா தனது நிலையை மாற்றியுள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.