பாமக நிர்வாகிகளுடன் 2வது நாளாக அன்புமணி ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டுவருகின்றார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்றும் மூத்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். அதேசமயம் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள திருமண மண்டபத்தில் பாமக நிர்வாகிகளுடன் இரண்டாவது நாளாக அன்புமணி ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். கூட்டத்தில் பங்கேற்க மொத்தம் 16 மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 15 பேர் பங்கேற்றுள்ளனர்.