ரூ.2 லட்சம் வரையான கடன்களுக்கு collateral வேண்டாம் என நிதியமைச்சகம் கோரிக்கை....

ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக கடன் கேட்கும் சிறு வாடிக்கையாளர்களுக்கு collateral இல்லாமல் கடன் வழங்க வேண்டுமென நிதியமைச்சகம் ஆர்பிஐக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் நகை கடன்களுக்கான விதிமுறைகள் குறித்த வரைவை ஆர்பிஐ வெளியிட்டது. இதில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளாக பொதுமக்கள் பலரும் பாதிக்கப்படுவதால், அதில் மாற்றங்கள் சிலவற்றை கொண்டு வரலாம் என்றும் மத்திய நிதியமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளது.
அதாவது இரண்டு லட்சம் வரையான நகைக்கடன்களுக்கு பழைய விதிமுறையே பின்பற்றலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆர்பிஐயின் புதிய விதிமுறை வரைவுகள் அனைத்தும் 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகளுக்கான வரைவு ஏப்ரல் 9ம் தேதி அன்று பொதுமக்களின் கருத்துகளுக்காக ஆர்பிஐ வெளியிட்டது. மே 12 ஆம் தேதிக்குள் கருத்துகளை பொதுமக்கள் பகிர வேண்டுமென ரிசர்வ் வங்கி கோரியிக்கை வைத்திருந்தது. அதாவது நகைக்கடன் எந்த நோக்கத்திற்காக வாங்கப்படுகிறது என்பதை வங்கிகள் மற்றும் என் பி எஃப் சி-களுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டுமே கடனாக வழங்க வேண்டும் என்றும் அந்த வரைவு-வில் குறிப்பிடப்பட்டிருந்தது.