பொதுவாக வெளியே தோலில் அரிப்பு இருந்தால் அது உடலின் உள்ளே என்ன பாதிப்பு என்று கண்டறிய வேண்டும் .பொதுவாக உள்ளுருறுப்புகளில் உண்டாகும் பாதிப்பே தோலில் அரிப்பாக வெளிப்படுத்தும் ..இதற்கு சில வீட்டு வைத்திய முறைகளை பார்க்கலாம்
1.தோல் அரிப்புக்கு பரங்கிப்பட்டை சூரணம் 2 கிராம், சிவனார் அமிர்தம் 200 மி.கி, பலகரை பற்பம் 200 மி.கி இவற்றை மூன்று வேளை பால் அல்லது வெந்நீரில் கலந்து குடிக்க குணமாகும் .
2.மேலும் தோல் அரிப்புக்கு அருகன் தைலம், குப்பைமேனி தைலம் இவற்றில் ஏதாவது ஒன்றை தோல் அரிப்பு ஏற்படும் இடத்தில் பூசலாம்.
3.சிலருக்கு தோல் வறட்சி தோன்றலாம் .இதற்கு கற்றாழை ஜெல் எடுத்து தண்ணீரில் கழுவி விடுங்கள் .பின்னர் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யில் அந்த கற்றாழை ஜெல்லை அரைத்து தோல் வறண்ட பகுதியில் பூச வறட்சி நீங்கும்.
4.நாம் தினசரி அடிக்கடி சாப்பிடும் உணவில் உள்ள கத்தரிக்காய், தக்காளி, புளி, கடுகு, நல்லெண்ணெய், காலிபிளவர், கருணைக்கிழங்கு, காளான் ஆகிய பொருட்கள் தோல் அரிப்பை கொடுக்கும் ,
5.மா, கொய்யா போன்ற மலிவான பழங்களும் மீன், கருவாடு, வறுத்த கோழி, முட்டை போன்ற அசைவ உணவுகளும் தோல் நோய் உள்ளவர்களுக்கு அரிப்பை கொடுத்து பாடாய் படுத்தி எடுக்கும் .
6.மேலும் சத்து குறைபாடு, கிருமிகள், சிறுநீரகத்தில் கழிவுகள் சரியாக வெளியேறாமல் இருத்தல் ,நுரையீரல் பிரச்சினை போன்றவற்றாலும் தோலில் அரிப்பு தோன்றலாம்