மெட்ரோ ரயில்களில் பயணங்களில் சர்ச்சைகள், புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் டெல்லி மெட்ரோவில் பரபரப்பான ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இதில், ஒரு பெண் தனது கையில் குழந்தையுடன் நின்றபடியே, முன் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
34 வினாடிகள் நீடிக்கும் அந்த வீடியோவில், மடியில் குழந்தையுடன் நின்ற பெண், “இது அரசாங்க விதி… ஹெல்ப்லைனுக்கு அழைக்கவும்…” என சத்தமாகக் கூறுவதை கேட்கமுடிகிறது. அமர்ந்திருந்த பெண் “விதிகள் உங்களுக்கு மட்டுமேதான் பொருந்துமா?” என வாக்குவாதம் செய்கிறார்.
2 பேரின் சண்டை தீவிரமடைந்து வந்தபோதிலும் மெட்ரோவில் இருந்த பிற பயணிகள் யாரும் மத்தியிலே தலையிடவில்லை. சிலர் அமைதியாக அந்தக் காட்சியை பார்வையிட்டு, சிலர் மொபைலில் வீடியோ பதிவு செய்ததை காண முடிகிறது. இந்த காணொலிக்கு சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒருவர் – “இப்போதெல்லாம் மெட்ரோவில் ஆண்களைவிட பெண்களே அதிகமாக சண்டையிடுகிறார்கள்”.மெட்ரோவில் ஒழுங்கமைக்கப்பட்ட விதிமுறைகள் இருந்தாலும், பயணங்களில் ஏற்படும் மோதல்கள் குறைவடைய வேண்டும் என பல வகையான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.