பெங்களூரு நெரிசலில் 11 பேர் பலி.. தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த கர்நாடக ஐகோர்ட்..!
Webdunia Tamil June 05, 2025 10:48 PM

பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில், கர்நாடக ஐகோர்ட் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நீதிபதி காமேஸ்வர் ராவ் மற்றும் நீதிபதி ஜோஷி ஆகிய இரண்டு நீதிபதிகள் இதை குறித்து விசாரணை செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விபத்து காரணமாக மக்களுக்கு எந்த அளவுக்கு கவலை இருக்கிறதோ, அதே அளவு எங்களுக்கும் கவலை இருக்கிறது; எனவே தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

ஏற்கனவே இந்த சம்பவத்தை விசாரணை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் முதல்வர், துணை முதல்வர் மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், கர்நாடக மாநில ஐகோர்ட் தானாக முன்வந்து இந்த வழக்கின் விசாரணையை ஏற்றுள்ளது. இது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் முதல்வர் சித்தராமையா அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்த சம்பவத்திற்கு விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். தவறுகள் யார் மீது இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.