பொலோரோ கார் மோதி 10 அடி உயரத்தில் தூக்கி வீசப்பட்டு துடிதுடித்து ஒருவர் பலி!
Dinamaalai June 04, 2025 02:48 AM

சிகார் மாவட்டத்தில்  வசித்து வருபவர்  செங்கல் சூளை உரிமையாளர் சுபாஷ் ஜோஷி . 62 வயதான இவர்  சனிக்கிழமை மாலை சாலா கிராமத்தில் வீதியை கடக்க முயற்சித்தார். அப்போது, புயல் வேகத்தில் வந்த மஹிந்திரா பொலேரோ கார் அவர் மீது மோதியது. அவர் சுமார் 10 அடி உயரத்தில் காற்றில் பறந்து, தலைகீழாக விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தக் கொடூர விபத்துக்கான வீடியோ, பொலேரோ காரின் டேஷ்கேமில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவில், அந்த கார் அதிவேகமாக மூன்று வாகனங்களை முந்தி சென்று, சாலையின் ஓரத்தில் நடந்து சென்ற சுபாஷ் மீது நேராக மோதுவதை தெளிவாகக் காணலாம். 

மோதிய பின் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றார். இதனால், பொதுமக்கள் இதை விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை எனக் கூறுகின்றனர். சுபாஷ் ஜோஷி, தனது வீட்டிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள செங்கல் சூளைக்குச் சென்று, ஸ்டீல் கெட்டிலில் பாலை எடுத்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில்தான் இந்த விபத்து நடந்துள்ளது.


இந்த விபத்தில் பால் கெட்டி சுமார் 40 அடி தூரம் சென்று விழுந்தது. அந்த பகுதி கிராமப்புற சாலை என்பதால் பாதிப்புகள் ஏற்படவில்லை என தெரிகிறது.  அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு  கபில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் மகன் பங்கஜ் இச்சம்பவம் குறித்து  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டிய பொலேரோ ஓட்டுநருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.