BMW கார் வாங்கி கொடுக்கல?.. 21 வயது இளைஞர் தற்கொலை.!
Tamilspark Tamil June 03, 2025 04:48 AM

தனக்கு பிடித்த காரை தந்தை வாங்கிக் கொடுக்காததால் 21 வயது இளைஞர் உயிரை மாய்த்துக்கொண்டார்.

இளைஞர் தற்கொலை:

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டை பகுதியில், 21 வயதுடைய இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். அவர் தனது பெற்றோரிடம் பிஎம்டபிள்யு கார் வாங்கி கேட்ட நிலையில், பெற்றோர் மாருதி ஸ்விப்ட் கார் வாங்கித்தருவதாக கூறியதால் உயிரை மாய்த்துக்கொண்டார்.

இதையும் படிங்க:

மதுவுக்கு அடிமையானவர்:

கடந்த வெள்ளிக்கிழமை இளைஞர் தற்கொலைக்கு முயன்ற நிலையில், 2 நாட்கள் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மதுவுக்கு அடிமையான ஜானி என்ற இளைஞர், 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு ஊரைச்சுற்றி வந்துள்ளார். விவசாய குடும்பத்தை சேர்ந்த இளைஞர் எடுத்த முடிவு குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.