உலக நாடுகளிடம் பாகிஸ்தான் நிலை குறித்து விளக்கம் அளிப்பதற்காக, பிலாவல் பூட்டோ தலைமையில் பாகிஸ்தான் எம்.பி.க்கள் குழு சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், அமெரிக்காவில் இந்த குழு இன்று சுற்றுப்பயணம் செய்தது. அப்போது அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்திய முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பிலாவல் பூட்டோ கூறிய போது, அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்வியால் அவர் வாயடைத்து போனார்.
பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ இந்திய முஸ்லிம்கள் குறித்து கூறிய போது, “இந்தியாவில் முஸ்லிம்கள் வெறுப்புப் பொருளாக பார்க்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்தார். அப்போது அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர், “நான் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு தரப்பினரின் விளக்கங்களை பார்த்துள்ளேன். இந்திய தரப்பில் விளக்கக் கூட்டங்களை நடத்தியவர்கள் முஸ்லிம் ராணுவ அதிகாரிகள் ஆவர். குறிப்பாக சோபியா குரேசி, ஒரு முஸ்லிம், அவர்தான் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியா சார்பாக பேசியவர்,” என்று தெரிவித்தார்.
அதற்கு பிலாவல் பூட்டோ “நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் அது முழுவதும் சரியல்ல,” என்று சமாளித்து, அதன் பின் பேச்சை மாற்றி இந்தியாவை சீண்டும் வகையில் பேசினார். “சிந்து நதி எங்களுடையது, எங்களுடைய தாய் தான் சிந்து நதி. அதில் நீர் ஓட வேண்டுமா அல்லது ரத்தம் ஓட வேண்டுமா என்பதை இந்தியா தான் முடிவு செய்ய வேண்டும்,” என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த ஒவைசி “பிலாவல் பூட்டோ குழந்தைத்தனமாக பேச வேண்டாம். உன் தாத்தா தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார், உன் அம்மா தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். அப்படி இருக்கும்போது, நீ தீவிரவாதத்துக்கு ஆதரவாக பேசக்கூடாது. உன் அம்மாவை கொன்றால் பயங்கரவாதம், எங்கள் தாய்மார்களை கொன்றால் மட்டும் அது பயங்கரவாதம் இல்லையா?
அமெரிக்கா பொருளாதார நிதி தரவில்லை என்றால், நீங்கள் நாட்டையே நடத்த முடியாது. அப்படி இருக்கும்போது, நீங்கள் எங்களை மிரட்ட வருகிறீர்களா?” என்று கூறினார். அவருடைய இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.