பகைவனை எப்படி வெல்வது? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
Tamil Minutes June 06, 2025 01:48 PM
enemy

இந்தக் காலத்துல பெரியவங்க, சின்னவங்கன்னு யாருமே பார்க்குறதுல்ல. ஈகோதான். சின்ன செயலுக்குக்கூட பொறுமை இல்லை. கொதிச்சிடுறாங்க. பகை வளர்ந்து நாளடைவில் உறவுகளையும், நட்புகளையும் இழக்கச் செய்கிறது. உங்களை யாராவது திட்டுனாலும் சரி. துன்புறுத்தினாலும் சரி. இதயத்துல பகைமை உணர்ச்சிகளைக் காட்டாதீங்க. வெளிப்படையா கோபப்படுவதை விட இது ரொம்ப மோசமானது. பகையை எப்படி வெல்வதுன்னு வாங்க பார்க்கலாம். .

இது மானசீகப் புற்று நோய் பகைமையை வளர்க்காதீர்கள். மறந்து விடுங்கள் மன்னியுங்கள். இது ஏதோ ஒரு வெறும் லட்சியவாத பழமொழி அல்ல. உங்கள் அமைதியை பாதுகாக்க ஒரே வழி இது தான் உள்ளே பகைமை வளர்ப்பது என்பது ஒருவனுக்கு மிகுந்த கெடுதியைச் செய்யும். உங்களுக்கு தூக்கம் போய் விடும். உங்கள் ரத்தத்தை நீங்கள் நஞ்சு ஆக்குகிறீர்கள். ரத்தக் கொதிப்பும், படபடப்பும் உங்களிடம் அதிகரிக்கும்.

மாவீரன் அலெக்சாண்டரின் தந்தை பிலிப் சிறந்த அறிவாற்றல் மிக்கவர். பலம் பொருந்திய மன்னராக ஆட்சி செய்து வந்தார் அவரது பகுதிக்கு உட்பட்ட ஜமீன்தார் ஒருவர் மன்னரைப்பற்றி எப்போதும் குறை கூறிக் கொண்டு இருப்பார் இது மன்னரின் காதிற்கு எட்டியது அந்த நாட்டு வழக்கப்படி அது தேசவிரோதம். அந்த ஜமீன்தார் ஆர்க்கீடியஸ் இருக்கும் பகுதிக்கு சென்ற மன்னர் தன் அதிகாரிகளிடம் அந்த ஆர்க்கீடியஸை அழைத்து வரும்படி கூறினார்

தன் மந்திரியிடம் ஆர்க்கீடியஸ் என்னிடம் கொண்டுள்ள பகைமைக்கு இன்று முடிவு கட்டுகின்றேன் என்றார் விபரம் அறிந்த ஆர்க்கீடியஸ் மிகவும் பதற்றம் அடைந்தார். தன் ராஜதுரோகச் செயலுக்கு மரணதண்டனைதான் கிடைக்கும் என்ற கலவரத்தில் புறப்பட்டுச் சென்றார்

அவர் வந்ததும் மன்னர், எல்லா அதிகாரிகளையும் வெளியில் அனுப்பி விட்டு தனிமையில் சந்தித்தார் மன்னரின் தண்டனையை நிறைவேற்ற அதிகாரிகள் வெளியில் தயாராக காத்து இருந்தனர் சிறிது நேரம் கழித்ததும் மன்னரும் ஆர்க்கீடியஸும் கைக்கோர்த்துக் கொண்டு புன்முறுவலுடன் வெளியில் வந்தனர் எல்லோருக்கும் அதிர்ச்சி

மந்திரி, ‘மன்னா பகைவனை ஒழித்துக் கட்டுவேன் என்றீர்கள்’ என ஆச்சரியத்தின் விழிம்பில் கேட்டார் அதற்கு மன்னர் ‘ஆம், பகைவனை ஒழித்து கட்டிவிட்டு அவனிடத்தில் ஒரு புதிய நண்பனை உருவாக்கி விட்டேன்

ஆர்க்கீடியஸ் நல்ல மனிதர், என்னைப் பற்றி தவறாக புரிந்து கொண்டு இருந்துள்ளார். நேரில் பேசியதில் அது புரிந்து எங்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கியது. என்னைச் சரியாக புரிந்து கொண்டதால் அவர் என்மீது கொண்டிருந்த பகை உணர்வுகள் நீங்கி நட்பு மலர்ந்து உள்ளது’ என்றார்

பகைவனை அழிப்பது என்றால் பகைமையை அழிப்பது என்று தான் அர்த்தம், பகைவனைக் கொல்வதல்ல! அப்படிசெய்தால் பகைமை அழியாது. வம்ச வம்சமாகத் தொடரும் என்றார் நம்மை வெறுப்பவர்கள் நமக்கு பகைவர்கள் இல்லை, நம்மால் வெறுக்கப்படுபவர்களே நம் பகைவர்கள் பகைமை மறப்போம் அன்பை செலுத்துவோம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.