இஸ்ரேல் நாட்டுக்குள் கடந்த 2023 ஆம் ஆண்டு காசாவை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அப்போது சுமார் 252 பேரை அவர்கள் பிணைய கைதிகளாக பிடித்து சென்றனர். இதனால் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடந்த நிலையில் காசாவில் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக போர் நீடிக்கிறது. காசாவில் இதுவரை 60,000 மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் வரையில் போரை நிறுத்த மாட்டோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது காசா தாக்குதலை தீவிர படுத்தியுள்ள நிலையில் அவர்களுக்கு அத்தியாவசியமான உதவி பொருட்கள் வருவதையும் அவர்கள் நிறுத்தியுள்ளனர். ஐநா சபை மற்றும் உலக அமைப்புகள் தலையீட்டுக்கு பிறகு அவர்களுக்கு சிறிய அளவிலான உதவிகள் கிடைக்கப்படுகிறது. காசாவில் உணவு கிடைக்காமல் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழக்க வாய்ப்புள்ளது என ஐநா கவலை தெரிவித்துள்ள நிலையில் பல மாதங்களாக எல்லைப் பகுதி மூடப்பட்டுள்ளதால் தற்போது உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பார்லேஜி பிஸ்கட் காசாவில் ரூ.2400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக காசாவில் வசிக்கும் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ரஃபிக்கு பிடித்த பிஸ்கட்களை வாங்கினேன். அதன் விலை 24 யூரோக்களுக்கு மேல் இருந்தாலும் அவளுக்கு பிடிக்கும் என்பதால் என்னால் அதை வாங்காமல் இருக்க முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். மேலும் பிஸ்கட் விலை மட்டுமின்றி ஒரு கிலோ சர்க்கரை 4914 ரூபாய்க்கும், ஒரு கப் காபி 1800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.