இன்று தேரோட்டம்... திருநள்ளாறில் குவிந்த பக்தர்கள்!
Dinamaalai June 07, 2025 03:48 PM

இன்று திருநள்ளாறில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. அலைகடலென பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

நேற்று காரைக்கால் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், இன்று திருநள்ளாறு கோவில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக காரைக்கால் பகுதி முழுவதுமே நேற்றும், இன்றும் பக்தர்கள் கூட்டத்தால் களைக்கட்டி உள்ளது.

தேரோட்டத்தை முன்னிட்டு, உள்ளூர் மக்களும் திருவிழாவில் கலந்து கொள்ள வசதியாக இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்த விடுமுறைகளை ஈடுசெய்யும் வகையில் வரும் 14 மற்றும் 21ம் தேதிகளை வேலை நாட்களாக அறிவித்து காரைக்கால் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாங்கனி திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய ஸ்தலமான காரைக்கால் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் நேற்றூ நடைபெற்றது. இன்று திருநள்ளாறு கோவில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறைகளை ஈடுசெய்யும் வகையில் வரும் 14 மற்றும் 21ம் தேதிகளை வேலை நாட்களாக அறிவித்து காரைக்கால் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.