தென்னிந்திய ப்குதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஜூன் 10 முதல் 13ம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 10 – விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கனமழை.
ஜூன் 11 – ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்.
ஜூன் 12 – காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை சாத்தியம்.
ஜூன் 13 – நீலகிரி மற்றும் கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை மேகமூட்டம் நிலவும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழையும் பெய்யலாம். அதேவேளையில், மதியம் வெயில் தாக்கம் 100°F-ஐ தாண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.